Friday, 18 May 2012 05:41
இது குறித்து திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகத் தமிழ் சமுதாயத்தின் ஒப்பற்ற பாதுகாவலர், தலைவர் கலைஞரின் 89வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அடுத்த மாதம் (ஜூன்) 2ம் தேதி (சனிக்கிழமை) மாலை கலைஞரை பாடிப் பாராட்டி போற்றும் விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
விழாவிற்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர், இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் சுகவனம் எம்.பி., சேலம் ராஜேந்திரன், சம்பத், சந்திரசேகர், அசன் முகம்மது ஜின்னா ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
தொடக்கமாக தஞ்சை செல்வி ஐய்யப்பன் குழுவினரின் நாட்டுப்புற தெம்மாங்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதை தொடர்ந்து திராவிட கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மக்களாட்சியின் மாண்பறிந்தவர் என்ற தலைப்பிலும், திருமாவளவன் சமத்துவப் பெரியார் எனும் தலைப்பிலும், காதர் மொய்தீன் சிறுபான்மையினரின் சீரியக் காவலர் எனும் தலைப்பிலும், பொன்.குமார் உழைப்போரின் உற்ற நண்பர் எனும் தலைப்பிலும் பேராசிரியர் பர்வீன் சுல்தானா இலக்கிய ஏந்தல் எனும் தலைப்பிலும் கருத்துரை வழங்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் டெசோ அமைப்புக்கு மறு உயிர் தரும் திமுகவின் நடவடிக்கைகளின்போது தனக்கு அந்தக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று திருமாவளவன் வருத்தம் தெரிவித்திருந்தார். இந் நிலையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் அவர் பங்கேற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Page 9 of 3147
Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy