|
வாழ்வின் நிஜ முகங்கள்
|
வாழ்வின் நிஜ முகங்கள் வாழ்க்கையென்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகமூடிகளைக் காட்டவென வைத்திருக்கிறது. அது ஒவ்வொருவருக்கும் அழகாகவும், கோரமாகவும் தனது முகத்தை மாற்றி மாற்றிக் காட்டிக் கொண்டேயிருக்கிறது. அந்த முகங்களில் புன்னகையைத் தேடியபடியே ஒவ்வொருவரது பயணமும் நீடிக்கிறது அலைச்சலாகவும் நேரானபாதையிலும். இதே கணத்தில் எத்தனை உயிர்கள் தங்களது ஒருவேளை உணவினை குப்பைத் தொட்டிகளில் தேடிக் கொண்டிருக்கும்? குளிருக்குப் போர்வையோ, வெயிலுக்கு ஒதுங்கியிருக்கோ ஒரு நிழலோ இல்லாமல் எத்தனை உயிர்கள் தவித்துப் போய் துயரப்பட்டுக் கொண்டிருக்கும்? வெப்பம் உமிழும் கொடும் பாறைத் தரைகளில் வெற்றுக் கால்களோடு அலையும் உயிர்கள் எத்தனை? தாகத்துக்கு ஒரு மிடறுத் தண்ணீர், எழுதப் படிக்க வசதி, ஒழுகாத, ஒழுங்கான ஒரு குடிசையற்று எத்தனை உயிர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும்? சிந்தியுங்கள் நாம் சேர்த்து வைக்கும் சொத்து சுகங்கள் நாளை மரணித்தப் பிறகு நம் கூட வந்துவிடுமா ? மேலே படத்தில் உள்ள குழந்தையை பாருங்கள். நாம் பதுக்கி வைக்கும் பணக்குவியல்கள், இது போல குழந்தைகளின் பிணக் குவியலை காண்பதர்க்குதானா? இஸ்லாம் நமக்கு தெள்ளத் தெளிவாக கற்றுத்தந்தள்ளது உன் தேவைக்குப் போக மீதமுள்ளதை ஏழை எளியோருக்கு தானம் செய் என்று .இன்று நாம் எத்தனை பேரு அதை செய்கிறோம் ???மூன்று வேலை வயிறு முட்ட உணைவை உண்ணும் நாம், ஒரு வேலை உணவிற்கே வழியில்லாமல் வெறும் தண்ணியைக் மட்டும் குடித்துக்கொண்டு காலம் தள்ளி, மாண்டு போகும் குழந்தைகளும், ஏழைகளும் மத்தியில் ,இறைவன் நமக்கு அளித்த செல்வங்களை தர்மம் செய்யலாமே.(நம் தேவைக்கு போக மீதியை) |
|
Comments(1)
|
|
வருத்தமாகதான் உள்ளது என்ன செய்வது இந்த மனிதன் இருக்குறத விட்டுட்டு பறக்குறத பிடிக்க துடிக்கிறான் பொய்யான உலகை மெய்யென்றும் நிலையான உலகை வெறும் மாயை அல்லது கட்டு கதை என்று வாதிடுகிறான் மரணம் வரும் பொழுது யாவும் புரியும் ஆனா அப்பொழுது நாம் யாதொன்றும் நிகழ்த்த இயலாது
By: administrator
, On
Saturday, 21 August 2010
|
Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy